தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவனந்தபுரத்தில் கவர்னர் மாளிகை, முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கவர்னர் மாளிகை மற்றும் முதல்வர் இல்லத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக நீதிமன்றங்கள், கலெக்டர் அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு அடிக்கடி போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
Advertisement

இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு இமெயிலில் கவர்னர் மாளிகை மற்றும் முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக கவர்னர் மாளிகையிலும், முதல்வர் இல்லத்திலும் வெடிகுண்டு பிரிவு போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் எந்தப் பொருளும் சிக்கவில்லை. இதற்கிடையே மிரட்டல் இமெயில் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். நேற்று முன்தினம் திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement