தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் தீ: பெட்டியில் இருந்து குதித்த பயணிகள்

அரக்கோணம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் அருகே நேற்று காலை 8:26 மணிக்கு ரயில் வந்தது. அப்போது, ஏசி பெட்டியின் கீழ் பகுதியில் தீப்பொறியுடன், அதிகளவு புகை கிளம்பியது. இதனை பார்த்த மேல்பாக்கம் பகுதியில் பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உடனடியாக அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

இதனால், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. திடீரென ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் ஏசி பெட்டியில் இருந்து புகை, தீப்பொறி கிளம்பி அங்கு புகை மண்டலமாக காணபட்டது. இதை அறிந்த பயணிகள், அதிர்ச்சிக்குள்ளாகி அலறியடித்தபடியே ரயிலில் இருந்து கீழே குதித்தனர்.

தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தீயணைப்பு கருவியுடன் வந்து, ஏசி பெட்டியின் அடியில் ஏற்பட்ட தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இதையடுத்து அரை மணி நேர தாமதத்திற்கு பின் காலை 9 மணியளவில் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ உடனே கண்டறியப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்துகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement