தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளுவருக்கு காவி சாயம் கவர்னரின் சிறுபிள்ளைத்தனம்: சபாநாயகர் அப்பாவு கண்டனம்

Advertisement

நாகர்கோவில்: நாகர்கோவிலில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கவர்னராக இருந்தாலும், யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். தொடர்ந்து கவர்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தமிழக சட்டமன்றத்தில் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். சட்டமன்றத்தில் நிறைவேற்றி கொடுக்கும் தீர்மானங்களுக்கு எல்லாம் அவர் ஒப்புதல் வழங்குவதில்லை.

பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தோம் என்றால் அதற்கு ஒப்புதல் வழங்க மறுக்கிறார். வேண்டுமென்றே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். இது ஒரு மோசமான முன்னுதாரணம். உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. யார் சொன்னாலும் அவருக்கு உறைப்பதில்லை. ஒரு படித்த ஐபிஎஸ் அதிகாரி இப்படி செய்யலாமா? தான் வகித்த பதவிக்கும், இந்திய ஜனநாயகத்திற்கும் விரோதமாக நடந்து கொண்டிருக்கிறார்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. ஆனால், இவர் இந்தியா மதம் சார்ந்த நாடு என்று கூறுகிறார். கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை புகுத்த வேண்டும் என்று எல்லா இடத்திலும் பேசி வருகிறார். இதற்கெல்லாம் நல்ல முடிவு உச்சநீதிமன்றத்தால் வரும். திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசுவது கவர்னர் செய்யும் சிறுபிள்ளைத்தனங்களில் ஒன்றாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement