தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூரில் 2 நாட்களாக இடைவிடாது தொடர்மழை: குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதி

திருவள்ளூர்: வங்கக் கடலில் மோன்தா புயல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பட்டரைபெரும்புதூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்திருப்பதால் சுமார் 50 குடியிருப்புகளில் வாழும் மக்கள் இதனால் அவதியடைந்துள்ளனர்.

Advertisement

தொடர்ச்சியாக பருவமழை காலங்களில் இந்த தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அதேபோல இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆரம்ப காலத்திலேயே மழை வெளுத்துவாங்கிவருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூரில் பட்டரைபெரும்புதூர் பகுதியில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. வீதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனை அடுத்து நிரந்தரமாக கால்வாய் அமைத்து மழைநீர் தேங்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மாற்று இடம் ஒதுக்கி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement