தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாலங்காட்டில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கரும்பு லாரிகளால் விபத்து அபாயம்

 

Advertisement

திருத்தணி: திருவாலங்காட்டில் மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கரும்பு லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.திருத்தணி அருகே திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள், கரும்புகளை அறுவடை செய்து, லாரி மற்றும் டிராக்டர்களில் எடுத்து செல்கின்றனர். இவ்வாறு கரும்பாலைக்கு செல்லும் அனைத்து லாரி மற்றும் டிராக்டர்களும் திருவாலங்காட்டில் இருந்து சின்னம்மாபேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை மற்றும் ஜங்ஷன் பகுதியின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து, நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன.

இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் லாரிகள் நிற்பதுகூட தெரிவதில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாநில நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கரும்பு லாரிகள் மற்றும் டிராக்டர்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது. இப்பகுதியில் லாரிகளை நிறுத்த இட வசதி உள்ளது. அப்படி இருந்தும் சாலையிலேயே நிறுத்துகின்றனர். எனவே விபத்தை தவிர்க்கும் வகையில் சாலையோரத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News