தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாலங்காடு அருகே பள்ளி மாணவருக்கு சரமாரி கத்திவெட்டு

திருத்தணி: திருவாலங்காடு அருகே பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த 2 மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான ஒரு மாணவர், மற்றொரு பள்ளி மாணவரை கத்தியால் சரமாரி வெட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இன்று காலை பள்ளிக்கு வந்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரன், அருங்குளம், வி.என்.கண்டிகையை சேர்ந்த தருண்குமார் ஆகிய 2 மாணவர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடி கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது மாணவர்களான ராகவேந்திரனுக்கும் தருண்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான ராகவேந்திரனை தருண்குமார் கை, கால்களால் சரமாரி தாக்கியுள்ளார். பின்னர் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் ராகவேந்திரனை சரமாரி வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கத்திவெட்டில் படுகாயம் அடைந்த ராகவேந்திரனை ஆசிரியர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement