தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாலங்காடு அருகே நாதக பிரசார கூட்டத்தில் மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு

 

Advertisement

திருத்தணி: திருவாலங்காடு அருகே நாதக பிரசார கூட்டத்தில் மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் செந்தில்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர், தனது தேர்தல் பிரசாரத்தை திருவாலங்காடு அருகே வாக்குச்சாவடி எண்-1 அருங்குளம் கிராமத்தில் நேற்று மாலை தொடங்கினார். தேர்தல் பிரசார பரப்புரையில் அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பங்கேற்று பேசுகையில், ”சினிமா மோகத்தில் இளைஞர்களை கவர்ந்து முதலமைச்சர் கனவில் விஜய் உங்கள் முன் வருகிறார்.

சிந்தித்து ஒருமுறை பிரபாகரன் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையையும் எப்படி நேசிப்போம் என்பதை காட்டுவோம்” என பேசினார். இந்நிலையில், ஊழல், துஸ்பிரயோகம் குறித்து பேசும் நா‌தகவினர் பிரசார கூட்டத்திற்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடியது, டிபன் பாக்சுக்காக பெண்கள் முட்டிமோதிக்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மின்சார திருட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News