தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாடானை வட்டாரத்தில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை

திருவாடானை: திருவாடானை வட்டாரத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நிலத்தை உழுது தயார் செய்த விவசாயிகள், கடந்த ஒரு மாதத்திற்கு முன் நேரடி நெல் விதைப்பு செய்தனர். அதன்பின் ஒரு மாதமாக மழை இல்லாததால், விதைத்த நெல் வீணாகும் நிலை ஏற்பட்டது. பல கிராமங்களில் விவசாயிகள் மறு விதைப்பும் செய்தனர்.

Advertisement

இதனிடையே, அவ்வப்போது பெய்த மழையால், நெற்பயிர் முளைத்து வந்தன. இந்நிலையில், தற்போது ஒரு வார காலமாக திருவாடானை வட்டாரத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலை நீடித்தால், இளம் பயிர்கள் அழுகும் என கவலை தெரிவிக்கின்றனர். வயலில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், நெற்பயிர்களை காக்கவும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

Advertisement

Related News