தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணியில் நவீன இயந்திரம் மூலம் சொர்ணவாரி பட்டத்தில் நெல் அறுவடை பணி தீவிரம்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் 1.50 லட்சம் ஹெக்டேரில் நெல், கரும்பு, பயிர் வகைகள் மற்றும் காய்கறி, மலர் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில் விவசாயிகள் அதிகளவில் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்தாண்டு பருவமழை சராசரியாக பொய்த்தாலும், நீர்நிலைகளில் போதுமான அளவில் நீர் இருந்ததால், விவசாயிகள் நெல் பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டினர்.

Advertisement

சொர்ணவாரி பட்டத்திற்கான நடவு செய்யப்பட்ட நெல் பயிர் மகசூலுக்கு வந்த நிலையில், அறுவடை பணி கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. பருவமழை தொடங்க உள்ள நிலையில் விவசாயிகளின் அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் நவீன அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தி துரித வேகத்தில் அறுவடை செய்கின்றனர். கடந்த காலங்களில் கூலி ஆட்களை வைத்து நெல் அறுவடை செய்வதற்கு காலம், பணம் விரயம் ஆவதை தடுக்கும் வகையில் பெரும் பாலான விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.

சொர்ணவாரி பட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய மாவட்டம் முழுவதும் 50 பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எதிர்பார்த்தபடி விற்பனை செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு அதிகபட்சமாக 3 நாட்களில் அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால், சொர்ணவாரி பட்டத்தில் சன்னரகம் குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தி 2545 ரூபாயாக வழங்கப்படுகிறது. குண்டு ரகம் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Related News