தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் தீபம் ஏற்றும் இடத்தில் திடீர் தீ: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் பெண்கள் தீபம் ஏற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக காவடி எடுத்தும் முடி காணிக்கை செலுத்துவதும் வழக்கம். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த ஆலயத்தில் ராஜகோபுரம் எதிரில் மாடவீதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக இரும்பிலான பலகை உள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு பெண்கள் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அருகருகில் இருந்த தீபங்கள் சேர்ந்து தீ பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கரும்புகை எழுந்தது. இதனால் அங்கிருந்த பெண்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கோயில் ஊழியர்கள் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்தனர். சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. இதனால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement