தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புவனத்தில் மழைக்கு ஏடிஎம் மையத்தில் மாடு தஞ்சம்: சமூக வலைதளங்களில் வைரல்

திருப்புவனம்: திருப்புவனத்தில் கொட்டும் மழையில் தப்பிக்க மாடு ஒன்று ஏடிஎம் மையத்திற்குள் தஞ்சமடைந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளில் மக்கள் முடங்கினர். சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைவாகவே காணப்படுகிறது. அதேநேரம், தெருக்களில் கும்பல் கும்பலாக சுற்றித்திரியும் நாய்கள், கால்நடைகள் மழையில் இருந்து தப்பிக்க சாலையோர கடைகள், கூரைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன. இந்நிலையில், திருப்புவனம் மெயின்ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது.

Advertisement

இன்று அதிகாலை மாடு ஒன்று மழைக்கு ஒதுங்க இடமின்றி ஏடிஎம் மையத்திற்குள் புகுந்துவிட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏடிஎம் மையத்தை ஆக்கிரமித்துக்கொண்ட மாடு அங்கிருந்து நகரவில்லை. அதிகாலை நேரம் என்பதால் ஏடிஎம் மையத்திற்கு ஆட்கள் வராத நிலையில் மாட்டை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர், மழை ஓய்ந்ததால் ஏடிஎம் மையத்தில் இருந்து ஒருவழியாக மாடு வெளியேறியது. இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Related News