தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பரங்குன்றம் கோயிலில் தமிழில் குடமுழுக்கு சிறப்பு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Advertisement

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தேவாரம், திருமுறை, பண்ணிசை ஒலிக்க ஓதுவார்கள், பெண் ஓதுவார்கள் பங்கேற்க தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடைபெற்றதில் மகிழ்ச்சி. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப 7 நிலை ராஜகோபுரம், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளுக்கு குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றுள்ளது. டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பக்தர்கள் வசதிக்காக எல்இடி திரை, குடிநீர், உணவு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் குடமுழுக்கு சிறப்பாக நடந்துள்ளது. இனம், மதம், மொழியால் மக்களை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு இடையே சட்டம்-ஒழுங்கு, அமைதியுடன் குடமுழுக்கு நடந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 3,347 திருக்கோயில்களில் குடமுழுக்கு கண்டுள்ளோம். தமிழ் கடவுள் முருகனுக்கு மட்டும் 124 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement