தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பரங்குன்றம் வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க கூடாது: முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் வலியுறுத்தல்

சென்னை: திருப்பரங்குன்றம் வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க கூடாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களவை சபாநாயகரிடம் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்க வேண்டும் என எம்பிக்கள் மனு கொடுத்துள்ளனர். அதற்கான காரணம், திருப்பரங்குன்றம் தீர்ப்பாகும். இந்த சமயத்தில் தலைமை நீதிபதி அமைதியாக இருக்க கூடாது. தமிழ்நாட்டில் எச்.ராஜா திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற வேண்டும் என்கிறார், அவர் ஒரு அரசியல்வாதி.

Advertisement

ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதி எச்.ராஜா போலவும், ஆளுநர் ஆர்.என்.ரவி போலவும் செயல்படலாமா? ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த வழக்கில் கூடுதலாக அக்கறை செலுத்துகிறார். இதேபோல மற்ற வழக்குகளில் செலுத்த வேண்டியது தானே. அவருடைய மற்ற வழக்குகள் எல்லாம் அப்பீல் போடப்பட்டிருந்தால் தள்ளிப் போடலாம், இந்த வழக்கில் மட்டுமே ஏன் தினமும் கவனம் செலுத்துகிறார். எச்.ராஜா, ஆர்.என்.ரவி வரிசையில் சுவாமிநாதன் நிற்கிறார். தமிழ்நாட்டில் மத நல்லிணக்க அரசியலை கெடுக்க பாஜ இருக்கின்றது. அதற்கு ஜி.ஆர்.சுவாமிநாதன் துணை போகிறார். நீதிபதி திருப்பரங்குன்றம், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய வழக்குகளை ஜி.ஆர். சுவாமிநாதனிடமிருந்து வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும், இந்த வழக்குகளை அவர் விசாரிக்க கூடாது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கடந்த 75 ஆண்டுகளாக உயர் சாதிக்காரர்கள், சனாதனிகள் கைகளில் இருக்கின்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement