தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பரங்குன்றம் விவகாரம்: கலவரம் நடக்க எந்த முகாந்திரமும் இல்லை: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

 

Advertisement

சென்னை: திருத்தணி முருகன் கோயிலுக்கு நேற்று காலை 10.40 மணிக்கு வந்த மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விஐபி தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அரை மணி நேரம் கோயிலில் மூலவர், வள்ளி தெய்வானை மற்றும் உற்சவர், சண்முகர் ஆகிய தெய்வங்களை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் விஐபி கேட் நுழைவாயிலில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றினால் மத கலவரம் ஏற்படும் என்று திமுக தான் கூறுகிறது. அங்கு கலவரம் நடக்க எந்த முகாந்திரமும் இல்லை. திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை நிலுவையில் இருந்த வழக்கு தீர்ப்பின்படி மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும், உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட எந்த அமைப்பும் தீபம் ஏற்றுவதை எதிர்க்கவில்லை. பாஜ கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. கோயில்களை பொறுத்தவரை முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை வழங்கி தரிசனம் வசதி ஏற்படுத்தி தருவது இயல்புதான் என்றாலும் சாமானிய பக்தர்களுக்கு பாதிப்பின்றி விஐபிகள் தரிசனம் வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News