தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பரங்குன்றம் அருகே 1000 ஆண்டுகளை கடந்த சண்டிகேஸ்வரர் சிற்பம்

*அம்மனாக வழிபடும் கிராம மக்கள்

Advertisement

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அருகே கிராமத்தின் கண்மாய்க்கரையில், 1000 ஆண்டுகளை கடந்த சண்டிகேஸ்வரர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இப்பகுதி மக்கள் அலங்காரி அம்மன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில், தென்னகப் பண்பாட்டு ஆய்வு மைய ஆய்வாளர்கள் முனைவர் மீனாட்சி சுந்தரம், கோபி, மாரீஸ்வரன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சண்டிகேஸ்வரர் சிற்பம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சண்டிகேஸ்வரர் சிற்பங்கள், பொதுவாக சிவன் கோயில்களில் இருக்கும். ஆனால் நெடுங்குளம் கிராமத்தில் கண்மாய்க் கரையோரம் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படும் இச்சிற்பம் இரண்டரை அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டதாக உள்ளது.

பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள இதில், தலைப்பகுதி அகன்று விரிந்த ஜடாபாரத்துடனும், காதுகளில் வட்ட வடிவ பத்திர குண்டலங்களும் உள்ளன. கழுத்தில் ஆபரணங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில் மழுவும், இடது கரத்தை இடது காலில் வைத்தபடியும் அமர்ந்த நிலையில் இச்சிற்பம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இதன் வடிவமைப்பு அடிப்படையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம். இச்சிற்பத்தை இப்பகுதி மக்கள் அலங்காரி அம்மன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். விசேஷ காலங்களில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடத்துகின்றனர். இப்பகுதியில் முறையான ஆய்வு பணிகள் நடைபெற்றால் முற்கால பாண்டியர் கால தடயங்களை கண்டறிய வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.

Advertisement