தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமாவளவன் கார் பைக் மீது மோதிய விவகாரம் உள்துறை செயலர், டிஜிபி நவ.25க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை, உயர் நீதிமன்றம் அருகே சில நாட்களுக்கு முன் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனை மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வக்கீல் தட்டிக்கேட்ட போது வக்கீலுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வக்கீல் தாக்கப்பட்டார். திருமாவளவனை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக கட்சியினர் கூறினர்.

Advertisement

மேலும் தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி திருமாவளவன் குற்றம் சாட்டினார். இந்த சதிக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ், பாஜவினர் உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ஆதனூர் பாவேந்தர் நகரை சேர்ந்த வக்கீல் நெப்போலியன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் விசிக தலைவர் திருமாவளவன் மீது சாதிய வன்மத்தோடு திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்கொலை படை தாக்குதல் போன்று இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

எனவே திருமாவளவனுக்கு சிறப்பு போலீஸ் பாதுகாப்பு வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  இந்த மனுவை ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணை தலைவர் இமயம், உறுப்பினர் ஆனந்தராஜா ஆகியோர் விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Advertisement