தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமங்கலம் மேம்பாலத்தில் பைக் மீது சரக்கு வேன் மோதியது மனைவி பலி; கணவர் படுகாயம்: தொடரும் விபத்தால் பரபரப்பு

 

Advertisement

அண்ணாநகர்: திருமங்கலம் மேம்பாலத்தில் பைக் மீது சரக்கு வேன் மோதியதில் மனைவி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த தம்பதி ஜெயராஜ்(60), தேவகி (57). கூலி தொழிலாளர்கள். வேலை செய்வதற்காக மாதவரத்துக்கு இன்று காலை பைக்கில் சென்றனர். திருமங்கலம் மேம்பாலம் மீது சென்ற போது பின்னாடி வேகமாக வந்த சரக்கு வேன் திடீரென அவர்களது பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அப்போது கணவர் கண்முன்னே ரத்தவெள்ளத்தில் தேவகி பரிதாபமாக இறந்தார்.

விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைவாக சென்று படுகாயத்துடன் கிடந்த ஜெயராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவகி உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து சோழவரம் பகுதியை சேர்ந்த டிரைவர் மணி(50) கைது செய்து சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

‘’திருமங்கலம் மேம்பாலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மொபட் மீது லாரி மோதியதில் கூலி தொழிலாளி இறந்தார். தற்போது பெண் கூலி தொழிலாளி இறந்துள்ளார். திருமங்கலம் மேம்பாலத்தில் வேகத்தடை அமைக்கவேண்டும். தினமும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடவேண்டும்’ என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

Advertisement

Related News