தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணஞ்சேரி-மஞ்சுவிடுதி சாலை சீரமைக்க வேண்டும்

*கிராம மக்கள் கோரிக்கை

Advertisement

கறம்பக்குடி : திருமணஞ்சேரியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் புகழ்பெற்ற கோயில்கள் அமைந்துள்ள ஊரான திருமணஞ்சேரிக்கு தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக எந்த நேரமும் கூட்ட நெரிசில் காணப்படுகிறது. திருமணஞ்சேரி, மஞ்சு விடுதி கிராமத்திலிருந்து முதல் கரை தெருவிற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதன் காரணமாக கிராம பொதுமக்கள் அந்த சாலையில் செல்வதற்கே அச்சப்படுகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்துள்ளனர்.

எனவே, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், திருமணஞ்சேரி ஊராட்சி மஞ்சு விடுதி முதல் கரை தெரு மக்களின் நலன் கருதி உடனடியாக பழுதடைந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டுமென மஞ்சு விடுதி திருமணஞ்சேரி முதல் கரை தெரு பகுதி மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Related News