தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்கோவிலூர் அருகே சொத்து தகராறு டிராக்டர் ஏற்றி தந்தையை கொன்ற கொடூர மகன்

திருக்கோவிலூர்: சொந்து தகராறில் தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஒடுவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (70), விவசாயி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சுசீலாவுக்கு ஒரு மகனும், 2வது மனைவி சரஸ்வதிக்கு சந்திரசேகர், சிவக்குமார், சிவசங்கர் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், பழனி கடந்த சில வருடங்களுக்கு முன் 2வது மனைவி சரஸ்வதியின் மகன் சந்திரசேகருக்கு அதிகளவில் நிலமும், 5 பவுன் தங்க நகையும் கொடுத்துள்ளார்.

Advertisement

ஆனால் சந்திரசேகர் தந்தை பழனியை சரிவர கவனித்து கொள்ளாததால் மனமுடைந்த பழனி, சந்திரசேகர் மீது நிலம் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த 2 வருடமாக பழனி குடும்பத்துக்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பழனி தொடர்ந்த வழக்கு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால், ஆத்திரமடைந்த அவரது மகன் சந்திரசேகர் நேற்று காலை பழனி, ஒடுவன்குப்பம் ஏரி அருகே செல்லும்போது பின்தொடர்ந்து சென்று அவர் மீது டிராக்டரால் ஏற்றியுள்ளார்.

இதில் பழனி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் கூச்சலிடவே சந்திரசேகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து வந்த போலீசார், பழனியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பழனியின் முதல் மனைவி மகன் சக்கரவர்த்தி, கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தந்தையை கொன்ற சந்திரசேகர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அன்பரசி மற்றும் உறவினர்கள் நெடுஞ்செழியன் (25), ஜெயக்குமார் (35), மகன் ஏழுமலை (50) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதில் சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement