தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்கழுக்குன்றத்தில்‌ ஆடிப்பூர தேர் திருவிழா

Advertisement

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர விழாவின் 7ம் நாளான இன்று காலை தேரோட்ட வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி அம்மனை தரிசித்து வழிபட்டனர். திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர்‌ திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற சிவஸ்தலமாகும்.

இங்குள்ள மலைக்குன்றுகளை 4 வேதங்களாக கொண்டு, இதில் அதர்வன மலைக்குன்றின்மீது வேதகிரீஸ்வரர் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இம்மலையடிவாரத்துக்கு சற்று தள்ளி தாழக்கோவிலில் பக்தவசலேஸ்வரரும், திரிபுரசுந்தரி அம்பாளும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள திரிபுரசுந்தரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்‌ 10 நாட்களும் ஆடிப்பூர விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இக்கோயிலில் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாள் ஆடிப்பூர விழா நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வந்தன.

நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, அலங்காரங்களுடன் மகா தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், இங்கு ஆடிப்பூர விழாவின் 7ம் நாளான இன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் திரிபுரசுந்தரியம்மன் மலர் அலங்காரங்களுடன் அமர்த்தப்பட்டு, 4 மாடவீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். வழிநெடுகிலும் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

 

Advertisement

Related News