தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கி காணப்படும் கடல்: பாதுகாப்பாக நீராட பணியாளர்கள், போலீசார் அறிவுறுத்தல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் முன்புள்ள கடல் பகுதி 2-வது நாளாக 70அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுகிறது. எனினும் பக்தர்கள் அச்சமின்றி நீராடி வருகின்றனர். முருகன் கோயிலின் முன்புள்ள கடல் அவ்வப்போது உள்வாங்கி சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படும்.

Advertisement

இதற்கிடையே அமாவாசை முடிந்து மூன்று நாட்கள் ஆகியும் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. செந்தூர் பகுதிகளில் இருந்து அய்யா பகுதில் வரையிலும் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கரையில் இருந்து 70 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கி காணப்படுவதால் பச்சைநிறம் பாசி படிந்த பாறைகள் அதிகமாக வெளியில் தெரிகிறது.

அதன்மேல் பக்தர்கள் நின்று புகை படம் மற்றும் செல்ஃபி எடுத்து ஆபத்தை உணராமல் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் சிலர் கடல் உள்வாங்கி காணப்படும் பகுதியில் அந்த 70 அடி தாண்டி கடலுக்கு சென்று நீராடி வருகிறார்கள். ஆபத்தை உணராமல் கரையில் நிற்கும் மக்களை கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார் அதிகமாக ஆழத்தில் நீராட கூடாது என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

Advertisement