திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் 27ல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
Advertisement
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் 27ல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் தகவல் தெரிவித்துள்ளார். அக். 22ம் தேதி யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்
Advertisement