மக்களைத் தேடி பயணம்: திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் மக்களிடம் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு
Advertisement
மக்களைத் தேடி பயணம், 12வது நாள் பயணமாக இன்று (21.01.2025) சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க. நகர் வடக்கு பகுதி, 74-வது வார்டு, ஓட்டேரி, பாஷ்யம் ரெட்டி முதல் மற்றும் இரண்டாம் தெருவில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அப்பகுதியில் சாலையோரங்களிலுள்ள கட்டிடக் கழிவுகளை உடனடியாக அகற்றிடுமாறும், பழுதடைந்த மின்சார பில்லர் பாக்சை மாற்றி புதிதாக அமைத்திடுமாறும், சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சிசிடிவி கேமராவை உடனடியாக பொருத்துமாறு காவல்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தி மற்றும் அப்பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Advertisement