தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களைத் தேடி பயணம்: திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் மக்களிடம் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு

Advertisement

சென்னை: மக்களைத் தேடி பயணம், 12வது நாள் பயணமாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி, பாஷ்யம் ரெட்டி தெருவில் வசிக்கும் பொதுமக்களிடம், வீதி வீதியாக சென்று அவர்களின் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்து, அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சிசிடிவி கேமராவை உடனடியாக பொருத்துமாறு காவல்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 44 மாநகராட்சி வார்டுகளில் உள்ள 83 வட்டங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் தேவைகளை கண்டறிந்து குறைகளை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மக்களைத் தேடி பயணம், 12வது நாள் பயணமாக இன்று (21.01.2025) சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க. நகர் வடக்கு பகுதி, 74-வது வார்டு, ஓட்டேரி, பாஷ்யம் ரெட்டி முதல் மற்றும் இரண்டாம் தெருவில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அப்பகுதியில் சாலையோரங்களிலுள்ள கட்டிடக் கழிவுகளை உடனடியாக அகற்றிடுமாறும், பழுதடைந்த மின்சார பில்லர் பாக்சை மாற்றி புதிதாக அமைத்திடுமாறும், சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சிசிடிவி கேமராவை உடனடியாக பொருத்துமாறு காவல்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தி மற்றும் அப்பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement