தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோடை விடுமுறை எதிரொலி; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்: படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தனர்

குலசேகரம்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே திற்பரபு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் தடுப்பணையில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கோதையாற்றில் பாயும் தண்ணீர் இங்கு அருவியாக கொட்டுகிறது. அருவிகளில் குளிக்கவும், படகுசவாரி செய்யவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவிக்கு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை முதலே அதிகளவில் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வரத்தொடங்கினர். கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜில்லென்று கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளமிட்டனர். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியின் மேல் பகுதியில் உள்ள உல்லாச படகு சேவை பகுதிக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படகில் உற்சாகமாக ஏறிச்சென்று கோதையாற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கடைகளில் நொறுக்குத்தீணி விற்பனை களைகட்டியது. கோடை விடுமுறை முடியும் வரை திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும் என பணியாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அசம்பாவிதங்களை தவிர்க்க திற்பரப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.