தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக கூறி எஸ்எஸ்ஐ மனைவியிடம் ரூ.24 ஆயிரம் அபேஸ்

வளசரவாக்கம்: திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக கூறி எஸ்எஸ்ஐ மனைவியிடம் ரூ.1,500 மற்றும் ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.23 ஆயிரத்தை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவி பச்சையம்மாள் (44). இவர் நேற்று முன்தினம் முகப்பேரில் இருந்து திருமங்கலத்துக்கு மாநகர பஸ்சில் பயணம் செய்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கை கிடைக்காமல் நின்றிருந்தார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், பச்சையம்மாளிடம் நைசாக பேச்சு கொடுத்து, மணிபர்சை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Advertisement

இங்கு திருடர்கள் நடமாட்டம் உள்ளது. கொஞ்சம் அசந்தால் அம்போதான்,’ என பயமுறுத்தும் வகையில் கூறியுள்ளார். இதனால் பயந்து போன பச்சையம்மாள், கைப்பையை அந்த பெண்ணிடம் கொடுத்து, ‘பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், திருமங்கலம் வந்ததும் பெற்றுக் கொள்கிறேன்,’ என்று கூறியுள்ளார். அந்த பெண்ணும் வாங்கிக் கொண்டார். திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலைய பஸ் நிறுத்தம் வந்ததும் அந்த பெண்ணிடம் இருந்து பையை வாங்கிக் கொண்டு பச்சையம்மாள் கீழே இறங்கியுள்ளார்.

பின்னர், பையில் இருந்த தனது மணிபர்சை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.1,500 ரொக்கம், ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஏடிஎம் கார்டு மாயமானது தெரிந்தது. சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், ஏடிஎம் கார்டு மூலம் ரூ.23 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ஏடிஎம் கார்டு ரகசிய குறியீட்டு எண், மறந்து விடும் என்பதற்காக கார்டின் பின்னால் எழுதி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, நூதன திருட்டில் ஈடுபட்ட அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

Advertisement