தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் தேவர்: வைகோ புகழாரம்

 

Advertisement

மதுரை: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: 49வது ஆண்டாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளேன். இடையில் சிறையில் இருந்த காலங்களில் வரமுடியாமல் போனது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஒடுக்கப்பட்டவர்கள் செல்வது தொடர்பாக காந்தியடிகள் உரிய ஏற்பாடு செய்ய கூறினார். இதன்படி, வைத்தியநாத ஐயர் ஏற்பாடு செய்தபோது ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து முத்துராமலிங்கத் தேவரை ராஜாஜி சந்தித்தார். அப்போது, ஒடுக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து தானும் கோயிலுக்குள் செல்வேன் எனவும், அதை தடுத்தால் நடப்பது வேறு எனவும் தேவர் கூறினார். அதைத் துண்டு பிரசுரமாகவும் அச்சடித்து வழங்கினார். இதனால்தான் ஆலய பிரவேசத்தின்போது எந்த பிரச்னையும் நடக்கவில்லை. நாட்டின் விடுதலைக்காக அதிக நாட்கள் சிறையில் இருந்தவர். நேதாஜியின் மறு உருவமாக திகழ்ந்தார். விண்ணுலகும், மண்ணுலகும் உள்ள வரை தேவரின் புகழ் நிலைத்து நிற்கும். இவ்வாறு வைகோ கூறினார்.

Advertisement

Related News