தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேரூர் பேரூராட்சி அதிமுக முன்னாள் தலைவர் சதி சான்றிதழை ரத்து செய்த தனிநீதிபதி உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த அமுத ராணி தேர்வு செய்யப்பட்டார். இதே தேரூர் பேரூராட்சியில் ஐயப்பன் என்பவர் வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பேரூராட்சியில் தலைவர் பதவி என்பது பட்டியல் சமுகத்தை சேர்ந்த மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கிருஸ்தவராகஉள்ள அமுதராணி பட்டியல் சமுக சான்றிதழை போலியாக கொடுத்து தலைவர் பதவியை அடைந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஐயப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி விக்டோரியா கௌரி; அமுத ராணியின் சாதி சான்றிதலை ரத்து செய்து உத்தரவிட்டார். பட்டியல் சமுகத்தை சேர்ந்தவர் வேறு மதம் மாறினால் பட்டியல் சமுகத்தினருக்கு அளிக்கப்படும் சலுகைகளை அனுபவிக்க முடியாது. மதம் மாறிய பிறகு அந்த மதத்திற்குன்டான சலுகைகளை மட்டுமே அனுபவிக்க முடியும். எனவே இந்த சாதி சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவரது பதவி பறிக்கப்பட்டது.

இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அமுதராணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் முன்பாக விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் தனி நீதிபதியின் உத்தரவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உறுதி செய்தது.

நீதிபதிகள் கூறுகையில்; தனிநீதிபதியின் உத்தரவு தெளிவாக உள்ளது. ஒருவர் பட்டியல் சமுகத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறிவிட்டால் அவர் அந்த பலனை அனுபவிக்க முடியாது. சம்பந்தபட்ட நபர் கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார். அதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறினர்.

ஒருவர் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவது என்பது இந்திய அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தனது புதிய நிலையை மறைத்து பழைய அடையாளத்தில் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் போது இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News