தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானையை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் வளர்க்கப்படும் சுமங்கலா என்ற பெண் யானைக்கு கிருமாறன் என்பவர் பாகனாக உள்ளார். இந்த யானை இரவு நேரத்தில் காட்டுக்குள் மேய்ச்சலுக்கு சென்று அதிகாலை முகாமிற்கு வந்து ஆண் யானைகளை தாக்குவதும், முட்டி தள்ளுவதும் வாடிக்கை. சில நாட்களுக்கு முன் மேய்ச்சலுக்கு சென்ற சுமங்கலா யானை அதிகாலையில் முகாமிற்கு வந்து சங்கர் என்ற யானையை முட்டி கீழே தள்ளியது. இதனால் அந்த யானை பிளிறி சத்தம் போட்டது. சத்தம் கேட்ட சங்கர் யானையின் பாகன் விக்கி ஆத்திரமடைந்து குச்சியால் சுமங்கலா யானையை தாக்கியுள்ளார்.

Advertisement

மீண்டும் அது சங்கர் யானையை தாக்கியது. இதனால் கோபம் அடைந்த விக்கி கத்தியை எடுத்து யானையின் பின்னங்காலில் வெட்டினார். அதன் பிறகு சுமங்கலா யானை அந்த இடத்தை விட்டு அகன்றது. விக்கி கத்தியால் வெட்டியதில் யானைக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த சுமங்கலாவின் பாகன் கிருமாறன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா ஆகியோர் அங்கு சென்று காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். அது தற்போது நல்ல நிலையில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் யானையை வெட்டிய பாகன் விக்கியை உடனடியாக பணிநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Advertisement