தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

92 சவரன் திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத காவல் உதவி ஆணையரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜிரினா பேகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மகள் திருமணத்திற்கு வாங்கிய 92 சவரன் நகைகள் 2018ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி திருடு போனது. இதுகுறித்து சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். வழக்கு பதிவு செய்தனர். ஆனால், நகையை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Advertisement

கடந்த 8 ஆண்டுகளாக எனது நகையை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வழக்கை சிபிசிஐடி விசாரணை மாற்ற வேண்டும் என்று கோரினார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.முகமது சபீத், நகையை மீட்பது தொடர்பாக காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை சூளைமேடு காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜாராகினர். அப்போது நீதிபதி, குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக முறையாக பயிற்சியை காவல்துறையினருக்கு அரசு வழங்க வேண்டும். அவ்வாறு முறையாக பயிற்சி இல்லாத, கடமையை செய்ய தவறிய காவல் அதிகாரிகளை வெளியேற்ற நீதிமன்றம் நடவடிக்கையை மேற்கொள்ளும்.

குற்றம் நடந்த காலத்திற்கு பிறகு சூளைமேட்டில் அதிக காலம் ஆய்வாளராக பணியாற்றி தற்போது சென்னை சென்ட்ரல் ரயில்வே இரும்பு பாதை உதவி ஆணையாக பணியாற்றி வரும் கர்ணன் என்பவரை டிஜிபி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை பணியாற்றிய மற்றும் பணியாற்றும் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போன்று சேலம் மாவட்டம் வீராணம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தவணை முறையில் வீட்டுமனை வழங்குவதாக அளிக்கப்பட்ட புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆய்வாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரிய வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2018 முதல் தற்போது வரை வீராணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி இருந்தனர். இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, குற்ற வழக்கு பதிவு செய்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த காவல் ஆய்வாளர்கள் மீது டிஜிபி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisement