தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீரத்தமலை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

*பொதுமக்கள் கோரிக்கை

Advertisement

அரூர் : தீர்த்தமலை பகுதியில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தின் பிரசித்த பெற்ற புண்ணிய தலமான தீர்த்தமலையில், பல்வேறு வியாதிகளை தீர்க்கவல்ல அதிசய தீர்த்தங்கள் உள்ளது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து, ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இங்குள்ள வடிவாம்பிகை தீர்த்தகிரீஸ்வரர் கோயில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுபாட்டில் உள்ளது. வனப்பகுதியில், மலையின் மேல் சுமார் 2000 அடி உயரத்தில் உள்ள தீர்த்தமே கண்டுபிடிக்க முடியாத அதிசமாக உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூ, பழம், தேங்காய், பொறி கடலை ஆகியவற்றை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் கொண்டு வருகின்றனர்.

பெரும்பாலான வனப்பகுதிகள், கோயில்களில் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அதனை கடைபிடித்து வரும் நிலையில், தீர்த்தமலையில் அந்த விதிகளை கடைபிடிப்பதில்லை. இதனால் தீர்த்தமலை மலை பகுதி முழுவதும் வண்ண வண்ண பிளாஸ்டிக் பொருட்களால் நிரம்பி காணப்பட்டது. இந்த வனப்பகுதியில் அதிக அளவில் குரங்குகள், மான்கள் உள்ளிட்டவை வசித்து வருகிறது.

பக்தர்கள் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் மான், குரங்குகள் இறந்துவிடும் சூழல் உள்ளது. அத்துடன் பச்சை பசேல் என காணப்பட்ட மலை பகுதி பிளாஸ்டிக் கவர்களால் நிலத்தடி நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள வழியோர கடைகளிலும், தீர்த்தமலையில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது.

வனத்துறை, கோயில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை. எனவே வனத்துறையும், கோயில் நிர்வாகமும் கடும் கட்டுப்பாட்டை விதித்து பக்தர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News