தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்தது: தாராபுரம் அருகே பரபரப்பு

Advertisement

தாராபுரம்: காற்றின் வேகம் தாங்காமல் காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்த சம்பவம் தாராபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-பொள்ளாச்சி சாலை அருகே உள்ளது சீலநாயக்கன்பட்டி. இங்குள்ள செரியன் காடுதோட்டம் என்ற இடத்தில் சென்னையை தலைமை இடமாக கொண்ட தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை இயங்கி வருகிறது. இதன் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனம் கவனித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை காற்றின் வேகம் தாளாமல் காற்றாலை இயந்திரம் உடைந்து கீழே விழுந்தது. இதில் 60 அடி உயர காற்றாடிகள் 9 துண்டுகளாக உடைந்து சிதறியது.

இதன் மதிப்பு ரூ. 5 கோடி இருக்கும் என காற்றாலை நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அருகில் சென்ற மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டது. அருகில் உள்ள தோட்டங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வெங்காய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். உடைந்து விழுந்த காற்றாடி குடியிருப்பு பகுதிகளுக்குள் பறந்து சென்று விழுந்திருந்தால் கால்நடைகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். எனவே காற்றாலைகளை முறையாக பராமரித்து இயக்க அதன் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News