தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போனில் பேசுவதற்கு இடைஞ்சல்: கணவரை கோடாரியால் அடித்து கொன்ற மனைவி

திருமலை: அடிக்கடி போனில் பேசியதை தட்டிக்கேட்ட கணவரை, மனைவி கோடாரியால் அடித்துக்கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சிந்தப்பள்ளி அடுத்த மேதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராவ்(46), இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவி கடந்த 2 ஆண்டுகளாக யாரோ ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசுவாராம். இதனை அறிந்த கணவர் ராஜாராவ், மனைவியை தட்டிக்கேட்டார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், வழக்கம்போல் தேவி, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட ராஜாராவ், ஏன் தொடர்ந்து போனில் பேசுகிறாய்? எனக்கூறி அவரை திட்டியுள்ளார். இதனால் கணவர் மீது தேவி கடும் ஆத்திரத்தில் இருந்தார். பின்னர் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

Advertisement

அதன்படி நேற்று அதிகாலை 3 மணியளவில் ராஜாராவ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது தேவி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து, கணவரின் தலையில் சரமாரியாக அடித்தார். இதனால் படுகாயம் அடைந்த ராஜாராவ், மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் தூங்கிக்கொண்டிருந்த அவரது மகன் எழுந்தார். அதற்குள் தேவி தப்பியோடிவிட்டார். இதையடுத்து ராஜாராவை அக்கம்பக்கத்தினர் உதவியுடன், மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிந்தப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாராவ் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரில் மறைவான இடத்தில் பதுங்கியிருந்த தேவியை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News