தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கே.வி.குப்பம் அருகே தொடர் மழை; 5 கிணறுகளின் சுவர் இடிந்து விழுந்தது: விவசாயிகள் அதிர்ச்சி

 

Advertisement

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே தொடர் மழையால் 5 விவசாய கிணற்றின் சுவர்கள் இடிந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே, குடியிருப்புகள், சாலைகள், அரசு கட்டிடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் நீர்நிலைகள், விவசாய கிணறுகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. நீர்நிலைகளையும், வெள்ளம் புகுந்த பகுதிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக கே.வி.குப்பம் தாலுகாவில் தண்ணீர் முழுவதும் நிரம்பியிருந்த 5 விவசாய கிணறுகளின் சுவர்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தது.

நேற்று முன்தினம் சென்னங்குப்பத்தை சேர்ந்த தசரதன் விவசாய கிணறும், நேற்று வடுகந்தாங்கல் உத்திரகுமார் என்பவரின் கிணறு, வேலம்பட்டில் கங்காதரன் என்பவரின் கிணறு என மொத்தம் 5க்கும் மேற்பட்ட விவசாய கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது. மேலும் மின்மோட்டாரும் கிணற்றில் மூழ்கியது. சுமார் 100 அடிக்கு மேல் ஆழம் உள்ள கிணற்றில் மின்மோட்டார் பைப்புகளை மீட்க முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்துறை, தோட்டக்கலைத்துறையினர் விவசாய கிணறுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பான அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்ததற்கு இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News