தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்சிப்புளி அருகே மின்சாரம் துண்டிப்பால் பாதி வழியில் நின்ற ரயில்: மேலும் 2 ரயில்கள் நடுவழியில் நின்றன

 

Advertisement

மண்டபம்: உச்சிபுளி அருகே, மின்சாரம் துண்டிப்பால் சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் பாதி வழியில் நின்று தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால், மதுரை-ராமேஸ்வரம், திருச்சி-ராமேஸ்வரம் ரயில்களும் பாதி வழியில் நின்று தாமதாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுளி அருகே, இந்திய விமானப் படைக்கு சொந்தமான பருந்து விமானத்தளம் உள்ளது. இதன் அருகே ரமேஸ்வரத்திற்கு செல்லும் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை செல்கிறது. விமானத்தளத்தின் பாதுகாப்பு கருதி இந்த பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை. மாறாக பூமிக்குள் மின்கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி வழியாக ரயில்கள் கடக்கும்போது, குறைந்த வேகத்தில் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு வந்த (போட்மெயில்) விரைவு ரயில் (16751) காலை 7.30 மணியளவில் பருந்து விமானத்தளம் பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது மின்கேபிள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மின்கம்பத்திற்கு செல்லும் இணைப்பு, ரயில் இன்ஜினின் பாண்ட் கிராப்ட் மோதி மின்சாரம் தடைபட்டது. இதனால், இன்ஜினுக்கு போதிய மின்சாரம் கிடைக்காமல் ரயில் பாதி வழியில் நின்றது. பின்னர் மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டு சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. சென்னை-ராமேஸ்வரம் ரயில் பாதி வழியில் நின்றதால், இன்று காலை மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயில் (56711) பரமக்குடியில் நிறுத்தப்பட்டு, பின்னர் 10.15 மணியளவில் புறப்பட்டு சென்றது.

இதேபோல, திருச்சி-ராமேஸ்வரம் ரயில் மானாமதுரையில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றது. இவ்வாறு 3 ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றதால், பயணிகள் அவதிப்பட்டனர். மேலும், ராமேஸ்வரத்திலிருந்து பகல் 12 மணியளவில் மதுரைக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News