தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடியக்கரையில் முன்கூட்டியே சீசன் துவங்கியது வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகை: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் முன்கூட்டியே சீசன் துவங்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்துக்கு எதிரே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இது வெளிநாட்டு பறவைகளின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுகிறது. பறவைகளின் புகலிடமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் 290 வகையான பறவைகள் வந்து செல்லும். அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் காலமாகும். வடதுருவம் பகுதியில் நிலவும் கடும் குளிரை போக்குவதற்காக இங்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன.

Advertisement

வழக்கமாக ரஷ்யா, சைபீரியா நாடுகளில் இருந்து பூநாரை, ஆர்டிக் பிரேதேசத்தில் இருந்து பச்சை கால் உள்ளான், சிகப்பு கால் உள்ளான், பவளக்கால் உள்ளான் என 47 வகையான உள்ளான் மற்றும் இலங்கையில் இருந்து கடல் காகம், கடல் ஆலா, ஈரான், ஈராக்கில் இருந்து கூழை கிடா, அன்டார்டிகா பகுதியில் இருந்து பறவைகள் அதிகளவில் வந்து செல்லும். அக்டோபர் மாதம் தான் சீசன் துவங்கும் என்றாலும் வேதாரண்யத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது. இதனால் சைபீரியா, ரஷ்யாவில் இருந்து பூநாரை என்று அழைக்கக்கூடிய பிளமிங்கோ, வண்ண நாரை, கருவால் முக்கான், கடல் ஆலா, உப்பு கொத்தி, பவளக்கால் உள்ளான், சிவப்புக்கால் உள்ளான் உள்ளிட்ட பறவைகள் கோடியக்கரைக்கு வந்துள்ளது. இதனால் கோடியக்கரையில் முன்கூட்டியே சீசன் துவங்கியுள்ளது.

சுற்றுலா பயணிகளும் உற்சாகத்துடன் பறவைகளை பார்வையிட்டு வருகின்றனர். இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் ஜோசப் டேனியல் கூறியதாவது: கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை பறவைகள் சீசன் காலமாகும். ஆண்டுதோறும் 5 லட்சம் முதல் 10 லட்சம் பறவைகள் வந்து செல்கிறது. பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக கோடியக்கரை திகழ்வதால் ஆண்டுதோறும் பறவைகள் வரத்து அதிகரித்து வருகிறது. வேதாரண்யத்தில் சீதோஷ்ண நிலை நன்றாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வர துவங்கியுள்ளது. பறவைகளை பார்வையிட காலை 6 மணி முதல் 10 மணி, பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றார்.

Advertisement

Related News