தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘’ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபம்’’- மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவருக்கு வலைவீச்சு

Advertisement

பெரம்பூர்: ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி (67). இவரது மனைவி பாத்திமா பீவி (60). இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் இளைய மகள் இறந்துவிட்டதால் தனது பேத்திக்கு துணையாக வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் ஹவுஸிங் போர்டு பகுதியில் ஜாபர் அலியும் அவரது மனைவியும் இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை ஜாபர் அலி தனது மனைவியை ஆசைக்கு இணங்கும்படி கேட்டதாக தெரிகிறது.

அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த ஜாபர் அலி, தான் வைத்திருந்த பிளேடால் மனைவியின் முகம், கையில் சரமாரியாக கிழித்துவிட்டார். ரத்தவெள்ளத்தில் துடித்த பாத்திமா பீவியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு முகம் மற்றும் கையில் 14 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுசம்பந்தமாக எம்கேபி.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து ஜாபர் அலியை தேடி வருகின்றனர்.

Advertisement