தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் மின்தடை லிப்டில் இருந்து வெளியில் வர முயன்ற முதியவர் பரிதாப பலி

Advertisement

பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி.பார்க் இ பிளாக் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன் (60). அதே பகுதியில் தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு சதீஷ் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். கணேசன் நேற்று மாலை, அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் இருந்து 10வது மாடிக்கு செல்ல லிப்ட்டில் சென்றார். 6வது மாடிக்கும், 7வது மாடிக்கும் இடையே சென்றபோது திடீரென மின்தடை ஏற்பட்டதால், லிப்ட் இடையே நின்றுவிட்டது. இதையடுத்து கணேசன் லிப்டில் இருந்த போன் மூலமாக லிப்ட் ஆபரேட்டர் சாமுவேலுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சாமுவேல் 6வது மடுக்கு வந்து லிப்ட் கதவை திறந்தார். அப்போது, கணேசன் லிப்டில் இருந்து வெளியேற முயன்றபோது, நிலைதடுமாறி லிப்ட் சேம்பரில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து வந்த பேசின்பிரிட்ஜ் போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு விரர்கள் கணேசனின் உடலை மீட்டனர். பின்னர், போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தை அறிந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு லிப்ட் அடிக்கடி பழுதடைவதாகவும், மின்சார வசதி முறையாக இல்லை என்றும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement

Related News