தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவித்திர உற்சவத்தின் முக்கிய விழா: ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று பூச்சாண்டி சேவை

திருச்சி: பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும் 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இந்தாண்டுக்கான பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு யாகசாலை வந்தார். பின்னர் அங்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளினார். இதைத்தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். பவித்ர உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகே உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

Advertisement

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை இன்று பிற்பகல் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பூச்சாண்டி சேவையை பக்தர்கள் தரிசிக்கலாம். பூச்சாண்டி சேவையின்போது மூலவர் ரங்கநாதரின் திருமேனி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இது அச்சமூட்டுவது போல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்பர். பவித்ர உற்சவத்தின் 7ம் நாளான வரும் 9ம்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோயில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருள்கிறார். உற்சவத்தின் நிறைவு நாளான வரும் 11ம்தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கிறது. மறுநாள் பெரியபெருமாள் ரங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.

Advertisement

Related News