தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளித்த வங்கி ஊழியர், நண்பர் மாயம்: 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

 

போடி: போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் குளித்தபோது, அடித்துச்செல்லப்பட்ட வங்கி ஊழியர், அவரது நண்பரை தேடும் பணி இன்று 2வது நாளாக தொடர்கிறது. தேனி மாவட்டம், போடியில் உள்ள பெரியபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜஹாங்கீர் (47). நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை கேஷியர். இவரது நண்பர் மதுரை வாகைக்குளம் பகுதியை சேர்ந்த மஸ்ஜித் (52). இவர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று போடி அருகேயுள்ள குரங்கணிக்கு சென்றார். அங்கு கொட்டகுடி ஆற்றில் இறங்கிச்சென்று சொக்கன்கேணியில் 7 பேரும் குளித்தனர். அப்போது, ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் 7 பேரும் நீந்தியவாறு மறுகரைக்கு செல்ல முயன்றனர். ஆனால், இடையில் பெரிய பாறைகள் இருந்ததால் சிரமம் அடைந்தனர்.

அப்போது, ஜஹாங்கீர், மஸ்ஜித் ஆகிய இருவரும் ஆற்றி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த சகநண்பர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், 5 பேரும் மிகுந்த சிரமத்திற்கு இடையே நீச்சலடித்து கரைசேர்ந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் போடி தீயணைப்பு துறையினர் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தொடங்கினர். சுமார் 2 மணி நேரம் தேடுதல் பணி நடைபெற்றது. ஆதன்பிறகு இருள்சூழ தொடங்கியதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ்வரன் தலைமையில் 2வது நாளாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. வங்கி கேஷியர் உட்பட இருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.