தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எடப்பாடி மாமா கேட்டும் நோ சொன்ன மாப்பிள்ளை

அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளராக இருப்பவர் சிவபதி. முன்னாள் அமைச்சரான இவர் கடந்த மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர். இவர் எடப்பாடியை மாமா என்றும், அவர் இவரை மாப்பிள்ளை என்றும் பாசத்தோடு அழைத்துக்கொள்வார்கள். இந்த முறை பெரம்பலூரில் போட்டியிட, எடப்பாடி தரப்பில் இருந்து சிவபதியிடம் பேசினார்களாம்.

ஆனால் அவர் நான் சட்டமன்ற தேர்தலில் நின்று கொள்கிறேன் என கூறி விட்டாராம். அதேபோல் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் எம்பி மருதராஜ் ஆகியோரும் நழுவி விட்டார்களாம். இதனால் பெரம்பலூருக்கு பிரபலமான வேட்பாளர் கிடைக்காமல் அதிமுக அல்லாடி வருவதாக கூறப்படுகிறது.இதுபற்றி பெரம்பலூர் அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘பெரம்பலூர் தொகுதியில் சீட் கேட்டு 30க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி பெயரில் பணம் கட்டி உள்ளனர். சிவபதியும் எடப்பாடி பெயரில் தான் விருப்ப மனு கொடுத்துள்ளார். கடந்த முறை 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றதும், அதிமுக பிளவு பட்டிருப்பதுமே முக்கிய நிர்வாகிகள் போட்டியில் இருந்து ஒதுங்க காரணம். இதனால் இந்த முறை சாதாரண நபரையே தேர்தலில் நிறுத்த வேண்டிய நிலை கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது’ என்று சோகத்துடன் கூறினர்.

Related News