தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலைக்கு கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை; வழக்கில் இருவர் பிடிபட்டனர்: பேஸ்புக் காதலனுக்கு வலை

Advertisement

அண்ணாநகர்: சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான காதலனை தேடி வருகின்றனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெற்றோர், தங்களது 17 வயது மகளை காணவில்லை, என்று அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மாயமான சிறுமியின் செல்போன் எண்ணை டிராக் செய்தனர். அதில் சிறுமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று, ஒரு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மீட்டு, அரும்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினோத் (21) என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

அவர், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருவண்ணாமலைக்கு கடத்திச் சென்று, தனது நண்பர்களான அஜித் (21), ஜீவா (21) ஆகியோருடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, பேஸ்புக் காதலன் வினோத் மற்றும் நண்பர்களான அஜித், ஜீவா ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கி இருந்த அஜித், ஜீவா ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பேஸ்புக் காதலன் வினோத்தை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News