தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

Advertisement

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஜூனியர் டாக்டர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அவர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர். மேற்குவங்கத்தில் உள்ள ஜூனியர் டாக்டர்கள், கொல்கத்தா மருத்துவமனையில் சக பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததைக் கண்டித்து கிட்டத்தட்ட 42 நாட்களாக ெதாடர்ந்து மாபெரும் போராட்டத்தை நடத்தினர். நாட்டையே உலுக்கிய ெபண் மருத்துவர் பலாத்கார கொலை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. தானாக முன்வந்து வழக்குபதிந்து விசாரித்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை பணிக்கு திரும்பு மாறும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனாலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் கூறினர். இவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், நாளை முதல் ஜூனியர் டாக்டர்கள் பணிக்கு திரும்புகின்றனர். அதேநேரம் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதன்மூலம் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்த ஜூனியர் மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்குவங்க அரசு தலைவணங்க நேரிட்டது.

முன்னதாக ஜூனியர் டாக்டர்கள் பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை நடந்த 5 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டார். அதன்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், துணை கமிஷனர் (வடக்கு) அபிஷேக் குப்தா உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், மாநில சுகாதாரப் பணிகள் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோரும் மாற்றப்பட்டனர். முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மேற்குவங்க ஜூனியர் டாக்டர்கள் அமைப்பு தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றது.

Advertisement

Related News