தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணின் வளையலை 3 ஆண்டாக கூட்டில் வைத்திருந்த காகம்

Advertisement

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே ஒரு காகம் பெண்ணின் இரண்டு பவுன் வளையலை கொத்திச் சென்று 3 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய கூட்டிலேயே பத்திரமாக வைத்திருந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி அருகே உள்ள திருக்கலங்கோடு பகுதியை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி ஹரிதா. இவர் வழக்கமாக வீட்டின் பின்புறத்தில் தான் துணிகளை துவைப்பார். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஹரிதா எப்போதும் போல துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். சோப்புத் தண்ணீரில் பட்டு சேதமாகி விடக்கூடாது என்பதற்காக அவர் தன்னுடைய 2 பவுன் தங்க வளையலை கழட்டி அங்கிருந்த ஒரு கல்லின் மேல் வைத்திருந்தார்.

அப்போது திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காக்கா அந்த வளையலை கொத்திக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்றது. அதைப் பார்த்து ஹரிதா அதிர்ச்சியடைந்தார். எப்படியாவது வளையலை அந்தக் காக்காவிடமிருந்து பறித்துவிட வேண்டும் என்று நினைத்து அதன் பின்னால் அவர் ஓடினார். ஆனால் எந்தப் பலனும் இல்லை. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

சரத்தின் வீட்டுக்கு சற்று தொலைவில் அன்வர் சாதத் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஒரு மா மரம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இவர் தன்னுடைய குழந்தைகளுக்காக அந்த மரத்திலிருந்து மாம்பழங்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மரத்தில் இருந்த ஒரு காக்கா கூட்டில் இருந்த தங்க வளையலின் 3 துண்டுகளை கண்டெடுத்தார். அதை உரியவரிடம் ஒப்படைக்க தீர்மானித்த அன்வர் சாதத், அந்தப் பகுதியில் உள்ள பொது நூலக செயலாளரான ராஜன் என்பவரை சந்தித்து விவரத்தை கூறினார்.

இருவரும் சேர்ந்து நடத்திய விசாரணையில் அந்த வளையலுக்கு உரிமையாளர் ஹரிதா என தெரியவந்தது. இதையடுத்து அந்த வளையலை அன்வர் சாதத், ஹரிதாவிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை அப்பகுதியினர் அனைவரும் பாராட்டினர்.

Advertisement

Related News