தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7 பிஎம்டபிள்யூ கார் வாங்கும் விவகாரம்; ஊழலை ஒழிப்பதை காட்டிலும் ஆடம்பரம் விரும்பும் லோக்பால்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

புதுடெல்லி: பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது லோக்பால் அமைப்பு. இந்த அமைப்பு தற்போது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் 6 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், லோக்பால் அமைப்பு சார்பில் தலைவர் உட்பட அதன் 7 உறுப்பினர்களுக்கும் ஆடம்பரமான பிஎம்டபிள்யு 3 சிரீஸ் 330லி ரக கார்கள் வாங்க கடந்த 16ம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது. ஒருகாரின் விலை சுமார் ரூ.70 லட்சம் வீதம் பிற செலவுகள் உட்பட மொத்தம் ரூ.5 கோடிக்கு 7 கார்கள் வாங்கப்பட உள்ளது.

Advertisement

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘‘அன்னா ஹசாரே, கெஜ்ரிவால், ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் மூலம் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக தவறான கதை சித்தரிக்கப்பட்டது. இப்போது லோக்பாலின் யதார்த்தம் மக்கள் கண் முன் இருக்கிறது. இந்த அமைப்பு என்ன விசாரணை செய்தது, யாரை கைது செய்தது என்பது கேட்கப்பட வேண்டும்’’ என்றார்.லோக்பாலின் ஊழலை யார் விசாரிப்பார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே கேள்வி எழுப்பி உள்ளார். இது லோக்பால் இல்லை ஜோக்பால் என சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி விமர்சித்துள்ளார்.

Advertisement