தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரிச்சான் குருவி

கரிச்சான் (Drongo) என்பது சிறிய வகைப் பறவையாகும். ஆசியக் கண்டத்தைத் தாயகமாகக்கொண்ட ஒரு சிறு பாடும் பறவை. இப்பறவை காரி, கருவாட்டு வாலி, கருங்குருவி, கருவாட்டுக் குருவி, மாட்டுக்காரக் குருவி, வெட்டுவலியான் குருவி, நீண்டவால் குருவி, வழியான் குருவி, ஆனைச்சாத்தான் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. இது தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது தென்மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியா, இலங்கையிலும் கிழக்கில் சீனா, இந்தோனேசியா வரையிலும் காணப்படுகின்றது.

Advertisement

இப்பறவை முழுவதும் கறுப்பு நிறத்திலும் வால் பகுதி நீண்டு நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். இளம் பறவைகளுக்கு வயிற்றுப் பகுதியில் வெள்ளைத் திட்டு இருக்கும். பெரிய பறவைக்கு அலகின் அருகில் வெள்ளைப் புள்ளி இருக்கும். இவ்வினங்களில் துணையினங்கள் சாம்பல்நிற இறகுடனும், சில இனங்கள் தலையில் வெள்ளைக் குறியுடன் காணப்படுகின்றன. பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்தவெளியான வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும் வசிக்கிறது. பொதுவாக இவை மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு, மாடுகளின்மேல் அமர்ந்து இருக்கும். மாடுகள் நடக்கும்போது அவற்றின் கால்பட்டு செடிகளில் இருக்கும் சிறிய பூச்சிகள் பறக்கும்போது இவை பறந்துசென்று காற்றிலேயே அவற்றைப் பிடித்து உண்ணும். கரிச்சான்கள் கரையான், வெட்டுக்கிளிகள், குளவி, எறும்பு, புழுக்கள் போன்றவற்றை விரும்பி உண்ணும். இவை பயமற்ற பறவைகளாகும். இவை தங்கள் கூட்டில் முட்டையிட்டு ஆண், பெண் குருவிகள் மாறிமாறி 15 நாட்கள் அடைகாத்த பிறகு குஞ்சு பொரிக்கும். குஞ்சுகளுக்கு 21 நாட்களில் சிறகுகள், வால் போன்றவை முழுவதுமாக வளரும். முட்டையையும் குஞ்சுகளைப் பாதுகாக்க அதன் கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது.

Advertisement

Related News