தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவெகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தலைமறைவு: அவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு!

 

Advertisement

கரூர்: தவெகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தலைமறைவானார். அவரை கைது செய்ய காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி விஜயின் நாமக்கல் பிரச்சாரத்தின்போது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக சதீஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, இதனை அடுத்து அவர் முன்ஜாமின் கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக கூறி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் நேற்று விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.முருகவேல், ‘மனுதாரர் எந்த குற்றமும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக மனுதாரரை வழக்கில் சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என வாதாடினார். போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல் சந்தோஷ், ‘காவல்துறையின் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுவதாக கூறி மனுதாரர் தான் அனுமதி பெற்றார். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக மேலும் 8 வழக்குகள் மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களையும் அவர் தாக்கல் செய்தார். இந்த புகைப்படங்களை பார்த்த நீதிபதி, ‘கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்?. கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா?. பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?' என சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனிடையே தவெகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தலைமறைவானார். இந்நிலையில் அவரை கைது செய்ய காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

Advertisement

Related News