தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு 400 வீரர்கள் மல்லுக்கட்டு
Advertisement
காலை 6.40 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ இலக்கியா, வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதலில் கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, எவர்சில்வர் அண்டா, கட்டில், சைக்கிள், டிரஸ்சிங் டேபிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியை காண தஞ்சை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குவிந்தனர்.
Advertisement