தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை அருகே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி 12ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு!!

தஞ்சை: தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணம் அருகே மானம்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. தஞ்சை- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டெல்டா பகுதிக்கு ஒரு முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடாக தஞ்சை- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டம் கருதப்படுகிறது. அதில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை, சேத்தியாதோப்பு முதல் சோழபுரம் வரை, சோழபுரம் முதல் தஞ்சை வரை என மூன்று கட்டங்களாக நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
Advertisement

இதில் முதற்கட்டமாக சோழபுரம்-கும்பகோணம்-தஞ்சாவூர் பிரிவு நெடுஞ்சாலை பணி முடிக்கப்பட்டு கடந்த ஜனவரி 20ம் தேதி திறக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக சோழபுரம் முதல் சேத்தியாதோப்பு வரையிலான 50 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை பணி நிறைவடைந்தது. இதைதொடர்ந்து இதை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி சோழபுரம்-சேத்தியாதோப்பு வரையிலான வழித்தடத்துக்கு கட்டணம் வசூலிப்பதற்காக மானம்பாடியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி முதல் செயல்பட துவங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 52 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது. மானம்பாடி சுங்கச்சாவடியும் திறக்கப்பட்டால் மொத்த எண்ணிக்கை 53ஆக உயரும்.

Advertisement