தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்டுள்ள வாத்துகள்

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் நீச்சலுக்காக வாத்துகள் கொண்டுவரப்பட்டுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவி வந்தாலும் கடந்த 10 நாட்களாக மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழை கொட்டுவதால் தாழ்வான பகுதிகள், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. மேலும் பம்பு செட் வசதியுள்ள விவசாயிகள் இம்மழையை பயன்படுத்தி சாகுபடி பணிகளை வேகப்படுத்தி உள்ளனர்.
Advertisement

சாகுபடிக்கு முன்னதாக வயல்களில் தண்ணீர் பாய்ச்சும் படும் நிலையில் மேச்சலுக்காக வாத்துகள் கொண்டு வரப்படுகின்றன. பலத்த மழையால் நடவு மேற்கொள்ளாத வயல்களிலும் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் பெரிய அளவில் வாத்துகளுக்கு இரைகள் கிடைத்து வருகிறது. இதை அறிந்த வாத்து உரிமையாளர்கள் பேராவூரணி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பரமக்குடி போன்ற பகுதிகளில் இருந்து லாரிகளில் ஆயிரக்கணக்கான வாத்துகளை மேய்ச்சலுக்காக கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், அம்மாபேட்டை, கும்பகோணம், திருவையாறு போன்ற பகுதிகளில் வயல்களில் வாத்துகளுக்கு நண்டு, நத்தை மற்றும் பூச்சிகள் ஏராளமாக கிடைக்கின்றன. நல்ல இரை கிடைப்பதாலும் வாத்துகள் தற்போது ஏராளமான முட்டை இட்டு வருவதால் நல்ல வருவாய் கிடைப்பதாக வாத்து உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

Advertisement