தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்கவயலில் நூறாண்டு பழமையான சுரங்கபாலம் பயன்படுத்த தடை: ரயில்வே துறை எச்சரிக்கை

தங்கவயல்: தங்க வயலில் நூறாண்டை கடந்த பழுதடைந்த நிலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனை மீறினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. கடந்த 1894ம் ஆண்டு மைசூரு அரசு இருந்தபோது, அப்போதைய மெட்ராஸ் ரயில்வே கம்பனியால் பங்காரு பேட்டையில் இருந்து மாரிகுப்பம் வரை கோரமண்டல், உரிகம், சாம்பியன், மாரிகுப்பம் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
Advertisement

அதில் 1914ம் ஆண்டு கோரமாண்டல் ரயில் நிலையத்தில் இருந்து, உரிமம் ரயில் நிலையத்துக்கு இடையில், டாங்க் பிளாக் சுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் ரயில்வே (அண்டர் பாஸ்) சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சுரங்கப்பாலம், பொது மக்களின் போக்குவரத்துக்கு பயன்படுகிறது. ஆனால் சுரங்கப்பாலத்தின் கூரையில் விரிசல் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் பழுதடைந்துள்ளது. இதையொட்டி, சுரங்கப்பாலத்தை பயன்படுத்த கூடாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ரயில்வே நிர்வாகம் சுரங்க பாலத்தின் அருகே அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளது.அதில், இது நீர்வழிப் பாலம், இதை‌ பொதுப் பாதையாக பயன்படுத்துவது பாதுகாப்பற்றது. அதனால் இதை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1989 ரயில்வே சட்டம் பிரிவு 147ன் படி தடையை மீறுவது 6 மாதங்கள் வரை சிறை தண்டனைக்குரிய குற்றம் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலித் ரக்சன வேதிகே சங்க தலைவர் அன்பரசன், வெளியிட்டுள்ள அறிக்கையில், நூற்றாண்டுகளை கடந்த இந்த பழமையான சுரங்கப்பாலம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ரயில்வே நிர்வாகமும், இதுபற்றி எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு பலகை வைத்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இந்த பாலத்தில் செல்ல வேண்டாம். ரயில்வேதுறை மாரி குப்பம், சாம்பியன், உரிகம் ஆகிய நிலையங்களின் அருகே சுரங்க பாதைகளை அமைத்தது போல், உடனடியாக இந்த சுரங்க பாலத்தை புனரமைப்பு செய்து, பொது மக்களின் போக்குவரத்துக்கு வழி வகை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement

Related News